திரு. யேசுராஜனின் மைத்துனர் ஜஸ்டின் பிரபு அவர்கள் 'திருநிலை'ப்படுத்தப்பட்டபிறகு எமது பங்கில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்தோம். தொடர்ந்து அவர் திருப்பலி நிறைவேற்றினார். பிறகு மிக எளிமையான ஒரு பாராட்டு கூட்டமும் நடத்தி சிறு, சிறு பரிசுகளும் வழங்கினார்கள்.
கத்தோலிக்க கம்மாளர் சமுதாயத்திலிருந்து அரிதாக வரும் ஒரு திருநிலைப்படுத்தல் இது. அடிப்படை தமிழர்களான இவர்கள் உயர இத்தகைய நிலைகள் பயன்பட்டால் நல்லது. இன்னும் இயன்ற அனைத்து துறைகளிலும் இவர்கள் செல்லவேண்டும்.