Friday, October 15, 2010

ஈடுபாடில்லாமல்...

அழகான, அருமையான, சின்னஞ்சிறு பங்கென்றபோதும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் தவிக்கிறேன். ஓன்று, போதுமான நேரம் இல்லை. இரண்டு, சில நபர்கள் வெறுப்பூட்டும் அளவுக்கு பேசி உற்சாகத்தை கெடுத்துவிடுகிறார்கள். மூன்று, மறை மாவட்ட பணிப்பழு. நான்கு, போதுமான விசுவாசம் இல்லாதது!

எப்படியோ, ஒரு வகையாக பங்கு பணி நடக்கிறது! ஏழை மக்கள், நல்ல வேலை இல்லாதவர்கள், சொந்தமாக வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், எப்படியோ வாழ்கிறார்கள்! யார் இவர்களுக்கு ஒரு விடியலை காட்டப்போகிறார்கள்? கடவுள்களுக்கு காணிக்கைபோடும் இந்த ஏழைகளுக்கு கஞ்சி ஊத்த யார்? (தொடரும்... தொடரவேண்டும்...)

1 comment:

  1. தந்தையவர்களுக்கு நன்றி. அன்னை மரியாளின் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு ஆறுதலாய் இருக்கும். என்றும் அன்புடன் தியாகசீலன்

    ReplyDelete