Monday, November 1, 2010

ஜஸ்டின் பிரபு சே.சாவுக்கு

அருட்பணியாற்ற
சேசுசபை சேர்ந்து
அருள்நிலை பெற்ற
அன்பு ஜஸ்டின் பிரபு,

அல்லல் நிறை அவனியிலே
இயேசுவின் நற்செய்தியாக
வலம் வருவாய் நாளெல்லாம்
இறைக்கனவை நனவாக்க...

கோதுமை மணி மண்ணில்
விழுந்து மடிந்தாலொழிய
பலன் தராது-உண்மையிது.

நான் குறைய அவர் வளர்க
நான் மடிய நாம் மலர்க
சபை மடிய இறையாட்சி மலர்க
பேதங்கள் மறைய மனிதம் மலர்க.

உன்பணி சிறக்க உன்னொளி ஜொலிக்க
உண்மை ஜெயிக்க நன்மை நிலைக்க
வாழ்த்துதுமே வின்னேற்பரசி பங்கு
போற்றுதுமே தைக்காட்டன்னை பங்கு!
[தைக்காடு மக்களுக்காக, பங்கி. ௩௧.௧0.௨0௧0]

No comments:

Post a Comment